நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.7.50 கோடியில் தாலுகா, நகர் ஊரமைப்பு அலுவலக கட்டிடம் கட்டும் பணி கலெக்டர் துவக்கி வைத்தார்

நாகப்பட்டினம்,மார்ச்18: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ. 7 கோடியே 50 லட்சம் மதிப்பில் தாலுகா மற்றும் நகர் ஊரமைப்பு அலுவலக கட்டுமான பணிக்கான அடிக்கல் நடும் விழா நடந்தது. நாகப்பட்டினம் கோர்ட் வளாகத்தில் தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதையடுத்து அலுவலகத்தை புதுபிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தாசில்தார் அலுவலகம் கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்காக ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து கட்டுமான பணிக்கான அடிக்கல் நடும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் அடிக்கல் நட்டனர். இதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலக அருகே வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அலுவலகம் ரூ.3 கோடி மதிப்பில் கட்டுவதற்காக அடிக்கல் நடும் விழா நடந்தது. தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், எம்எல்ஏக்கள் முகம்மதுஷாநவாஸ், நாகைமாலி, டிஆர்ஓ ஷகிலா, கூடுதல் ஆட்சியார் ப்ரித்விராஜ், தாசில்தார் ராஜசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: