×

வையம்பட்டி அருகே பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி

துவரங்குறிச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி அருகே 10 அடி பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் தொழிலாளி பலியானார். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சி சீகம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் கார்த்திகேயன்(26). இவர் நேற்று அப்பகுதியில் விவசாய பணிக்காக டிராக்டரில் சென்றபோது அருகிலிருந்த 10 அடி பள்ளத்தில் எதிர்பாராத விதமாக டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் கார்த்திகேயன் பலத்த காயமடைந்தார். உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்திகேயன் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக கூறினர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வையம்பட்டி போலீசார், கார்த்திகேயன் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





Tags : Laborer ,Vaiyampatti ,
× RELATED கிராம கூட்டத்தில் தொழிலாளி கொலை: முன்னாள் நாட்டாமை கைது