×

திண்டுக்கல் அருகே போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே பள்ளி மாணவியை பாலியல் தொந்தரவு செய்த உடற்கல்வி ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் அருகே உள்ள செம்பட்டியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் கண்ணன் (34). இவர் சின்னாளபட்டியில் உள்ள பள்ளியில் தற்காலிக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்தார். இதற்கிடையே கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் திண்டுக்கல்லுக்கு அடிக்கடி பஸ்ஸில் சென்ற போது, திண்டுக்கல்லை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியுடன் பழகி வந்துள்ளார். மேலும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா லூர்து மேரி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் ஆசிரியர் கண்ணனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags : Dindigul ,
× RELATED திண்டுக்கல்-நத்தம் ரோட்டில்...