×

(தி.மலை) கோமுட்டி குளத்தினை சீரமைத்து தர வேண்டும் அறங்காவல் குழு கூட்டத்தில் வலியுறுத்தல் தீர்த்தவாரி நடைபெற உள்ளதால்


வந்தவாசி, மார்ச் 17: வந்தவாசி ரங்கநாதர் பெருமாள் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் ஆக்கிரமிப்பில் உள்ள கோமுட்டி குளத்தினை சீரமைத்து தர வேண்டும் என அறங்காவல் குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வந்தவாசி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழா வரும் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. அதை முன்னிட்டு பத்து நாட்கள் விழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று ரங்கநாதப் பெருமாள் கோயில் வளாகத்தில் நடந்தது. இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர் ம.சிவாஜி தலைமையில் நடந்த கூட்டத்தில், தேர் திருப்பணி குழு நிர்வாகிகள் பானுகோபன், நாராயணன், திலீப், குபேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்து பேசினார்கள். இதில் 7ம் நாள் தேரோட்டம் கண்டிப்பாக நடைபெற வலியுறுத்தினார்கள். தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும் கோமுட்டி குளக்கரையை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூய்மை செய்து தர வலியுறுத்தப்பட்டது.

Tags : Malai ,Gomutti pond ,Trustee Committee ,
× RELATED (தி.மலை) ஆர்வத்துடன் வாக்களித்த பெண் வாக்காளர்கள் கலசபாக்கம் தொகுதியில்