×

திருப்பூரில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட 3 பேருக்கு கத்திக்குத்து

திருப்பூர்: திருப்பூரில் மது அருந்தியதை தட்டிகேட்ட 3 பேருக்கு கத்திகுத்து விழுந்த சம்பவத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.  திருப்பூர் பலவஞ்சிபாளையம் பகுதியை அடுத்துள்ள ஜனசக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (53). இவர் அப்பகுதியில் கோவில் பூசாரியாக உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டருகில் 4 பேர் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். இதனை பார்த்த பழனிச்சாமி இங்கு அமர்ந்து மது அருந்தக்கூடாது என கூறியுள்ளார்.  இது குறித்த தகராறில் பழனிச்சாமிக்கும், 4 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தட்டி கேட்பதற்காக பழனிச்சாமியின் மகன் சுரேந்திரன் (20) உறவினர் செல்வகுமார் (25) ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

இதில் ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் பழனிச்சாமி, சுரேந்திரன், செல்வகுமார் ஆகியோரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் காயமடைந்த மூன்று பேரையும் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இதுகுறித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த சங்கர் (24), லோகேஷ் (20), ஜெபராஜ் (24) பாலகிருஷ்ணன் (22) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில், மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறு 4 பேரும் சேர்ந்து அவர்களை கத்தியால் தாக்கியது தெரியவந்தது. இதனையடுத்து வீரபாண்டி போலீசார் 4 பேரையும் கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Tirupur ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்