×

புதுச்சேரியிலிருந்து சிறுவாச்சூர் கொண்டு வர ஏற்பாடு கடன் பிரச்சினையில் தந்தையை தாக்கிய மகன் மீது வழக்கு

தா.பழூர்:தா.பழூர் அருகே கடன் பிரச்னையில் தந்தையை தாக்கிய மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கடம்பூர் கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (79). இவரது மகன் முருகேசன் (44). இந்நிலையில் முருகேசன் வீடு கட்டுவதற்கு கலியபெருமாள் தனக்கு தெரிந்தவர்களிடம் ரூ.50 ஆயிரம் கடனாக வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கலியபெருமாள் முருகேசனிடம் வாங்கி கொடுத்த 50 ஆயிரம் பணத்தை திருப்பி தரும்படி பலமுறை கேட்டுள்ளார். ஆனால் முருகேசன் பணம் கொடுக்காததால் தான் குடியிருந்த வீட்டை விற்க முயற்சி செய்துள்ளார்.
இதனை அறிந்த முருகேசன் தந்தை கலியபெருமாளை ஏன் வீட்டை விற்கிறாய் என்று கேட்டு அவரை தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கலியபெருமாள் அரியலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசில் கலியபெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Siruvachur ,Puducherry ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...