×

ஆட்டுக்குளம் ஊராட்சியில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு வேளாண் மாணவர்கள் அளித்தனர்

மேலூர்: மேலூரை அடுத்த ஆட்டுக்குளம் ஊராட்சியில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை, விவசாயிகளுக்கு வேளாண் மாணவர்கள் ஏற்படுத்தினர். மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் படித்து வரும் இளங்கலை 4ம் ஆண்டு மாணவர் யுவராஜ் தலைமையில் வந்த மாணவர் குழுவினர், வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ், இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சியை மேலூரை அடுத்த ஆட்டுக்குளத்தில், விவசாயிகளிடம் நடத்தினர். அப்போது இயற்கை விவசாயத்தின் பயன்கள், அதன் நன்மைகள் குறித்து அவர்கள் விளக்கம் அளித்தனர். மேலும், மண் வளத்தை அதிகரிக்க, இயற்கை விவசாய நடைமுறைகளை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறினர். இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Tags : Atkulam Panchayat ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ