×

திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்னையால் ரயிலில் பாய்ந்து வாலிபர் தற்கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் ரயில்வே இருப்புப்பாதை காவல் நிலையத்திற்கு உட்பட்ட திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கும் தாமரைப்பாடி ரயில் நிலையத்திற்கும் இடையே மதுரையில் இருந்து இருந்து திண்டுக்கல் நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் ஸ்டேஷன் மாஸ்டர் கொடுத்த தகவலின் பேரில் திண்டுக்கல் ரயில்வே இருப்புப் பாதை சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் ராஜேஷ்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விசாரணையில் ரயிலில் அடிபட்டு இறந்தவர் திண்டுக்கல் அங்கு விலாஸ் நரிப்பாறை தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(42) என்பது தெரியவந்தது. இவர் திண்டுக்கல்லில் சிமெண்ட் மூட்டை தூக்கும் தொழில் செய்து வருகிறார்.  இவருக்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் நேற்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு மணிகண்டன் வெளியே சென்று விட்டார். பின்னர் தனது மனைவிக்கு பலமுறை தொலைபேசியில் அழைத்த போது தொலைபேசியை எடுக்காத காரணத்தினால் மனம் உடைந்த மணிகண்டன் நேற்று ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து திண்டுக்கல் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.



Tags : Valibur ,Dintukal ,
× RELATED திண்டுக்கல் அருகே ரயில் மோதியதில் தொழிலாளி படுகாயம்