×

தூத்துக்குடி மாவட்டத்தில் 91 மையங்களில் 19,398 மாணவர்கள் பிளஸ்1 தேர்வு எழுதினர்

தூத்துக்குடி, மார்ச் 15: தூத்துக்குடி மாவட்டத்தில் 91 தேர்வு மையங்களில் 204 பள்ளிகளில் பயிலும் 8,617 மாணவர்களும், 10,801 மாணவிகள் மற்றும் தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 20,582 பேர் பிளஸ்1 தேர்வை எழுதுகின்றனர். இதில் 182 பேர் மாற்றுத்திறனாளிகள்.  இத்தேர்வுக்காக மாவட்டத்தில் 44 வினாத்தாள் கட்டுக்காப்பகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 44 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். வினாத்தாள் கட்டுகளை 23 வழித்தட அலுவலர்கள் பாதுகாப்புடன் அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

தேர்வை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் 170 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 91 பேர் துறை அலுவலர்களாகவும், 91 ஆசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், 1200 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். நேற்று மாவட்டத்தில் பிளஸ்1 தமிழ் தேர்வை மொத்தம் 19,398 பேர் எழுதினர். 1,184 மாணவ, மாணவிகள் ஆப்சென்ட் ஆகினர்.

Tags : Tuticorin ,
× RELATED தூத்துக்குடியில் பைக் விபத்தில் வாலிபர் பலி