×

முசிறி அருகே மூதாட்டி கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

முசிறி: முசிறி அருகே மூதாட்டி கொலை வழக்கில் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே சொரியம்பட்டி குடித்தெருவை சேர்ந்த மூதாட்டி செல்லம்மாள் (68) என்பவரை கடந்த 2012 ம் ஆண்டு கொலை செய்து ஒன்னரை பவுன் நகையை கொள்ளை அடித்துச் சென்றதாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது இவர் 2019 ம் ஆண்டு முதல் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

தலைமறைவாக இருந்து வரும்தேவராஜை பிடிக்க டிஎஸ்பி யாஸ்மின் உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்ஐ நாகராஜ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் பதுங்கியிருந்த தேவராஜை கைது செய்தனர். 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை பிடித்தற்காக இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அறிவுறுத்தலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர்கள் நாகராஜ் ,கோகிலா ஆகியோர் ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினர்.


Tags : Musiri ,
× RELATED முசிறி கிளை நூலகத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிகழ்ச்சி