×

பழைய பென்சன் திட்ட கோரி விஏஓ அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பாடாலூர்: பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் அருகே ஆலத்தூர் தாசில்தார் அலுவலகம் முன்பு வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு பெரம்பலூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ராஜா தலைமை வகித்தார். துணைத் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நாட்டார்மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பாலுசாமி சிறப்புரையாற்றினார். அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டரை மீண்டும் வழங்க கோருதல், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆலத்தூர் தாலுகா கிராம நிர்வாக அலுவலர் பலர் கலந்து கொண்டனர்.



Tags : VAO ,Benson ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!