×

ஆலத்தூர் அடுத்த மேலமாத்தூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

பாடாலூர்: ஆலத்தூர் தாலுகா, மேலமாத்தூரில் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியலூர்-பெரம்பலூர் மாவட்டத்திற்கு பல்வேறு அரசின் நலத்திட்டங்களை துவக்கி வைக்க வருகை தந்த தமிழ்நாடு இளைஞர் நலன்,விளையாட்டு மற்றும் சிறப்பு திட்ட அமலாக்க துறை அமைச்சரும், இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா எல்லையான மேலமாத்தூர் கிராமத்தில் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு மாலை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார். நேற்று மதியம் அரியலூர் அரசு சுற்றுலா மாளிகையிலிருந்து பல்வேறு நிகழ்ச்சிக்கு சாலை மார்க்கமாக பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அல்லிநகரம், சடைக்கம்பட்டி, அழகிரிபாளையம், மேலமாத்தூர் என வழிநெடுகிலும் பொதுமக்கள் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேலமாத்தூருக்கு காரில் வந்தபோது கழக தொண்டர்கள், பெண்கள், முதியவர்கள் உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர்.

இதனை மகிழ்ச்சியுடன் உதயநிதி ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். வரவேற்பில்,மாவட்ட அமைப்பாளர்கள் சுந்தரராசு, ரமேஷ், ஒன்றிய நிர்வாகிகள் முத்துகண்ணு, சாமிதுரை, ராமசாமி, சுமதி கென்னடி, ராஜேந்திரன், இளவரசு, அன்புச்செல்வன், மாவட்டத் துணை அமைப்பாளர்கள் குமார்,மதியழகன், தனவேல், கிளைச் செயலாளர்கள் நாராயணசாமி, சுந்தரம், கோபால், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராகவன், அகிலாராமசாமி, பாலமுருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளரும்,ஆலத்தூர் ஒன்றிய பெருந்தலைவருமான என்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Melamathur ,Aladhur ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...