×

காரைக்காலில் பிளஸ் 1 தேர்வுகள் தொடக்கம்

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் நேற்று துவங்கிய 11ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. இதில் காரைக்கால் மாவட்டத்தில் 2,233 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். மேலும் 49 தனித்தேர்வர்கள் தேர்வு எழுதினர். காரைக்கால் மாவட்ட கலெக்டர் முகமது மன்சூர், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் ஆகியோர் நிர்மலா ராணி அரசு உதவி பெறும் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் அன்னை தெரசா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பார்வையிட்டனர். மேல்நிலை கல்வி துணை இயக்குனர் ராஜேஸ்வரி மற்றும் முதன்மை கல்வி அதிகாரி ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Tags : Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...