×

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட சரண்டரை மீண்டும் வழங்க வேண்டும். ரத்து செய்யப்பட்ட பட்ட படிப்பு ஊக்க உதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags : Tamilnadu ,
× RELATED 450 கோடி முறை பெண்கள் இலவச பஸ் பயணம்:...