×

தமிழ் அறிஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சி துறையின்  சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ்  2022-2023ம்  ஆண்டிற்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
விண்ணப்பதாரர்கள் 1.1.2022ம் நாளன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்.   ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில்  இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமான சான்று, தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலை சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட  வேண்டும்.  

இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ  அல்லது தமிழ்  வளர்ச்சி துறையின் வலைத்தளத்திலோ (wwwtamilvalarchithurai.tn.gov.in) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின்கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு மாதந்ததோறும் உதவித்தொகையாக ரூ.3500, மருத்துவப்படி ரூ.500 அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 31.3.2023க்குள் அளிக்கப்பட வேண்டும்.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...