×

28 பவுன் நகைகள் திருட்டு

சிவகாசி, மார்ச் 14: சிவகாசி அருகே வீட்டில் இருந்த 28 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். சிவகாசி அருகே சித்துராஜபுரம் கீழூரை சேர்ந்தவர் ராஜராம். இவரது மனைவி வீட்டில் உள்ள பீரோவில் நகைகளை வைத்து சாவியை அருகே உள்ள செல்பில் வைத்திருந்தார். இந்நிலையில் இருக்கன்குடி கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பீரோவை பார்த்தார். அப்போது உள்ளிருந்த செயின்கள், வளையல்கள் என 28 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரிய வந்தது. சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது