கோயில்களில் திருவிழா: கூடுதல் போலீசார் நியமிக்க கோரிக்கை

இளையான்குடி, மார்ச் 14: இளையான்குடி அருகே தாயமங்கலம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் பங்குனி பெருந்திருவிழா மிகச் சிறப்பு வாய்ந்தது. திருவிழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த ஆண்டு விழா மார்ச் 29ம் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப்.5 பொங்கல் வைபவம், ஏப்.6 மின்சார அலங்கார தீப தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

சாலைக்கிராமம் வரகுனேஸ்வரர் கோயில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 27 முதல் ஏப்.5ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த திருவிழாவிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். எனவே பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருவிழாக்கள் நடைபெறும் நாட்களில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றுபொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: