×

17ம் தேதி முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தூத்துக்குடி,  மார்ச் 14: தூத்துக்குடியில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், வரும் 17ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து  தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோருக்கான சிறப்பு குறைத்தீர்க்கும் நாள் கூட்டம், வரும் 17ம் தேதி(வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள சிப்பிக் கூடத்தில் நடக்கிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் கலந்துகொண்டு தங்கள் மனுக்களை இரட்டை பிரதிகளில் அடையாள அட்டை நகலுடன் சமர்ப்பித்திடலாம். இதுகுறித்த  விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநரைநேரில் தொடர்புகொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : 17th Ex-Servicemen Grievance Day ,
× RELATED திருவேற்காடு எஸ்ஏ கல்லூரியில் ஆத்திசூடி இலக்கியத் தேடல் நிகழ்ச்சி