×

லாரி டிரைவர் தற்கொலை

வருசநாடு: மயிலாடும்பாறை அருகே தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் யுவராஜா (34). லாரி டிரைவர். இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட மனவிரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 5ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது குடும்பத்தினர் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருக்கலாம் என கருதினர். இந்நிலையில் மூலக்கடை கணவாய் மேடு பகுதியில் யுவராஜா தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்த புகாரில், கடமலைக்குண்டு போலீசார் அவரது உடலை மீட்டனர். அதன்பிறகு அவரது உடலை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


Tags : Lorry ,
× RELATED சைக்கிள் திருடிய லாரி டிரைவர் கைது