×

மருது பாண்டியர்களின் சிலைக்கு எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை

திருப்புத்தூர்: திருப்புத்தூரில் நேற்று மாலை மாமன்னர் மருது பாண்டியர்களின் திருவுருவ சிலைக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். சிவகங்கை மாவட்டத்தில் நேற்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டார். திருப்புத்தூர் வந்த அவர், அரசு நினைவு மணிமண்டபத்தில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பேருந்து நிலையம் எதிரே மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் உள்ள நினைவுத் தூணுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜு, ராஜேந்திரபாலாஜி, விஜயபாஸ்கர், உதயகுமார், காமராஜ், பாஸ்கரன் மற்றும் கோகுல இந்திரா, மாவட்ட அவைத் தலைவர் ஏவி.நாகராஜன், மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், பொதுக்குழு உறுப்பினர் கரு.சிதம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Maruthu Pandiyas' ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் 13 மையங்களில் 8,283...