×

ராணுவத்தில் சேர மார்ச் 20 வரை பதிவு

சிவகங்கை: இந்திய ராணுவத்தில் சேர மார்ச் 20 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: இந்திய ராணுவத்தில் சேர இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மார்ச் 20ம் தேதி வரை இப்பதிவு நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய இளைஞர்கள் www.joinindianarmy.nic.in  என்ற இணையதளத்தில் மார்ச் 20ம் தேதிக்குள் பதிவு செய்து பயனடையலாம். பணியிடங்கள் விபரம், தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மேற்காணும் இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...