திருச்சி: திருச்சி பரோடா வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் 47வது மாநில அளவிலான கூட்டம் நேற்று திருச்சியில் நடந்தது. கூட்டத்தை தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் துவக்கி வைத்தார். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் சிறப்புரையாற்றினார். பரோடா வங்கியின் மண்டல தலைவர் சரவணக்குமார் கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக பரோடா வங்கி ஊழியர் சங்கத் தலைவர் பிரகாஷ் வரவேற்றார். பொதுச் செயலாளர் நிவாசன் நன்றி தெரிவித்தார். கூட்டத்தில் பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.