×

முத்துப்பேட்டை 14-வது வார்டு புதிய குடியிருப்பு பகுதியில் 20 மின் விளக்குகள் அமைத்து பயன்பாட்டிற்கு வந்தது

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சி 14வது வார்டுக்கு உட்பட்ட சின்னக்கட்சி மரைக்காயர் தோட்ட வளாகம் பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட புதியதாக குடியிருப்புகள் அமைந்து தெருக்கள் உருவாகியது அதனால் இப்பகுதியில் உள்ள மின் கம்பங்களில் விளக்குகள் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து பேரூராட்சி சார்பில் சமீபத்தில் அப்பகுதியில் உள்ள 20மின் கம்பங்களில் தனி மின் இணைப்பு பொருத்தி புதியதாக எல்ஈடி விளக்குகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து முடிந்தது. இந்தநிலையில் இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று அப்பகுதி பேரூராட்சி கவுன்சிலர் ஜெகபர் அலி தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் பட்டனை அழுத்தி இயக்கி தெருவிளக்குகளை எரியவிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர் தமீம் அன்சாரி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் தம்பி மரைக்காயர், திமுக நிர்வாகிகள் நவாஸ்கான், காதர் உசேன், முஸ்தாக், தாஜ்மகால் அலி உட்பட பல்வேறு கட்சியினர் முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags : Muthupet 14th Ward New Residential Area 20 ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ