×

தஞ்சாவூர் கும்பகோணம் அருகே மின்கம்பத்தில் கார் மோதிய விபத்தில் ஒருவர் பலி

கும்பகோணம்: கும்பகோணம் அருகே கபிஸ்தலம் பகுதியில் மின்கம்பத்தி்ல் கார் மோதிய விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியானார். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியம், கணபதி அக்ரஹாரம் மெயின் ரோட்டில் வசிப்பவர் பரமசிவன் மகன் நமச்சிவாயம் (65) இவரது மனைவி கோமதி (60) மற்றும் மகன் ராஜா (35). இவர்கள் மூன்று பேரும் கடந்த 5ம் தேதி கணபதி அக்ரஹாரத்தில் இருந்து திருமானூருக்கு மருத்துவரை பார்க்க சென்று விட்டு மீண்டும் கணபதி அக்ரஹாரம் திரும்பி வரும் போது திருவையாறு-கும்பகோணம் நெடுஞ்சாலையில் ஈச்சங்குடி அருகே வந்தனர்.

அப்போது சாலை ஓரம் இருந்த மின் கம்பத்தில் எதிர்பாராத விதமாக கார் மோதியது. இதில் காரில் இருந்த நமச்சிவாயம், அவரது மனைவி கோமதி, கார் ஓட்டிய அவரது மகன் ராஜா ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மூன்று பேரில் நேற்று முன்தினம் நமச்சிவாயம் என்பவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kumbakonam ,Thanjavur ,
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்