பொன்னமராவதி: பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் ரேசன் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. பொன்னமராவதி தாலுகா அலுவலகத்தில் உணவு வழங்கல் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை பொது விநியோக திட்டம் தேசிய உணவு பாதுகாப்புச்சட்டபப்படடி பொது விநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில் வட்ட வழங்கல் அலுவலர் திருப்பதி வெங்கடாசலம் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று முகாமினை நடத்தினார். இதில் ரேசன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், புதிய கார்டு விண்ணப்பம் செய்தல், செல்போன் எண் மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகள் செய்ய 23 மனுக்கள் பெறப்பட்டது. இதில் காரையூர் ஆர்ஐ பாண்டி வட்ட வழங்கல் அலுவலக பொறியாளர் கார்த்திக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.