×

சீர்காழியில் அரசு பொதுத்தேர்வுக்கு நுழைவுச்சீட்டு வழங்கல்

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தனியார் மேனிலைப்பள்ளியில் பயிலும் 565 மேல்நிலைப்பிரிவு மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர் அறிவுடைநம்பி தலைமை வகித்தார். கீழப்பெரும்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமாவளவன் முன்னிலை வகித்தார். மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலர் சிவ தாஸ் (தனியார் பள்ளிகள்) கலந்து கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் நுழைவுச்சீட்டு வழங்கினார். மேலும் பள்ளியின் மேல்நிலைப்பிரிவு ஆசிரியர்கள் முருகபாண்டியன், சுந்தராஜன், அரங்கநாதன், இளங்கோவன், பத்ரிநாராயணன், ஸ்டாலின், வாசுதேவன், புலவேந்திரன், மணிகண்டன், பிரதீப், சுந்தரேசன், செந்தில்குமார் ஆகியோர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வு எழுதுகின்ற முறையை விளக்கினர். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் நன்றி கூறினார்.

Tags : Sirkazhi ,
× RELATED சீர்காழியில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்..!!