காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நேரு யுவகேந்திரா ஆகியவை இணைந்து “உலக மகளிர் தின விழா” நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழாவில், காஞ்சி கிருஷ்ணா கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் பா.போஸ் தலைமை தாங்கினார். தாளாளர் அரங்கநாதன், தலைவர் ஜெயக்குமார், செயலாளர்.தயாளன், பொருளாளர் மோகனரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், முதல்வர் வெங்கடேசன் “மகளிரும் வாழ்வியலும்” எனும் தலைப்பில் பெண்களின் சுதந்திரம், சகோதரத்துவம், மனிதநேயம், பெண்கல்வி, பெண்களின் ஆளுமைப் பண்புகளை மேற்கோள்காட்டி பெண்ணியம் குறித்து பேசினார்.