×

தூத்துக்குடி 2ம் ரயில்வே கேட் 13ம் தேதி இரவு முதல் 15ம் தேதி காலை வரை மூடல் தெற்கு ரயில்வே அறிவிப்பு

தூத்துக்குடி, மார்ச் 11: தூத்துக்குடி 2ம் ரயில்வே கேட் 13ம் தேதி இரவு முதல் 15ம் தேதி காலை வரை மூடப்படும் என்று தெற்குரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து, தெற்கு ரயில்வே முதுநிலை மேலாளர்(சிவில்) தங்கவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மதுரை டூ தூத்துக்குடி இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, மீளவிட்டான் முதல் தூத்துக்குடி ரயில் நிலையம் வரையுள்ள பகுதியில் புதியதாக தண்டவாளம் அமைத்தல், நடைமேடை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகள் காரணமாக தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி பகுதி வழியாக செல்லும் 2வது ரயில்வே கேட் 13ம் தேதி இரவு 10மணி முதல் 15ம் தேதி காலை 6 மணி வரை மூடப்படுகிறது. எனவே, வாகனஓட்டிகள், பொதுமக்கள் 1வது கேட் வழியாக சாலை போக்குவரத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் கூறியுள்ளார்.

Tags : Southern ,Railway ,Thoothukkudi 2nd Railway Gate ,
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...