×

ஒரத்தநாடு அருகே மின்வாரிய ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

ஒரத்தநாடு, மார்ச் 11: ஒரத்தநாடு அருகே மின்வாரிய ஊழியரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஒரத்தநாடு அருகே நெய்வேலி கடைத்தெருவில் மின்சாரம் தடைப்பட்டு இருப்பதாக மின்வாரியத்திற்கு தகவல் கிடைத்தது. திருவோணம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரங்கநாதன் உத்தரவின்பேரில், கேங்மேன் விஜய் மற்றும் ஆய்வாளர் முத்துராமன் ஆகியோர் மின்தடை ஏற்பட்ட இடத்தில் சென்றனர்.

அங்கு மின் வயர் சிக்கிய மரக்கிளையை வெட்டி அப்புறப்படுத்தி கொண்டிருந்தனர். இதை பார்த்த அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் (34) என்பவர், யாரை கேட்டு மரத்தை வெட்டுகிறாய் என்று கேட்டு கேங்மேன் விஜயை தாக்கியுள்ளார். இதுகுறித்து மின் வாரிய உதவி பொறியாளர் ரங்கநாதன், வட்டாத்திக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மின் வாரிய ஊழியரை தாக்கிய ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Orathanadu ,
× RELATED ஒரத்தநாடு அருகே கோயில் உண்டியலை உடைத்து திருட்டு