×

பெரம்பலூர் அருகே மொபட்டில் வந்த பெண்ணிடம் 8 பவுன் நகை கொள்ளை

பெரம்பலூர்,மார்ச் 11:  பெரம்பலூர் மாவட்டம், புது வேலூர் கிராமம், மாரியம் மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(37). ஐடி நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவரது மனைவி சுதா(33). இவர் சிறுவாச்சூர் அருகேயுள்ள தனியார் மருத்துவக்கல்லூ ரி மருத்துவமனையில் லே ப் டெக்னீஷியனாகப் பணி புரிந்து வருகிறார். இதற்கா க சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோவில் மேற்கேயுள்ள சாலைவழி யாக வேலூருக்கு தினமும் ஸ்கூட்டியில் சென்றுவருகி றார். நேற்று(10ம்தேதி) மாலை 5.30 மணிக்கு வழக்கம் போல் சுதா பணிமுடித்து தனது ஸ்கூட்டியில் மலை யடிவார சாலை வழியாக வேலூருக்கு சென்றுகொ ண்டிருந்தார்..இவர் தனி யாக ஊர் திரும்புவதை நோட்டம் விட்ட முக மூடிக் கொள்ளையர்கள் 4 பேர் செல்லியம்பாளையம் பிரிவு ரோடு அருகே சென் றுகொண்டிருந்த சுதா ஸ்கூ ட்டியை வழி மறித்து, சத்தம் போட்டால் கொன்று விடு வோமென கத்தியைக்கா ட்டி மிரட்டியுள்ளனர்.

பிறகு சுதா கழுத்தில் அணி ந்திருந்த எட்டரை பவுன் தா லிக்கொடியை துணிகரமா க மிரட்டி பறித்துக்கொண் டு தப்பியோடிவிட்டனர். புக ழ்பெற்ற சிறுவாச்சூர் அரு ள் மிகுமதுரகாளியம்மன் கோவிலுக்கு நேற்று வெள் ளிக் கிழமை நடைதிறப்பு என்பதால் நிறைய பக்தர் கள் பக்கத்துஊர்களில் இருந்து நடந்தும், வாகன ங்களிலும் வந்து செல்வது ண்டு. நேற்று அவர்களில் ஒருவரிடம் கொள்ளையடி க்கக் காத்திருந்த முகமூடி கொள்ளையர்கள், தனியா கவந்த சுதாவை வழிமறித் துத் தங்களது கைவரிசை யைக் காண்பித்துள்ளனர்.
இதுகுறித்து சுதா நேற்று மாலை பெரம்பலூர் போ லீஸ் ஸ்டேசனுக்கு வந்து வழிப்பறி நடந்தது பற்றிப் புகார் கொடுத்துள்ளார்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரிடம் விசார ணை செய்து வருகின்ற னர். பெரம்பலூரில் கடந்த ஒன் றரை மாதத்தில் பெரம்ப லூர் கலெக்டர் அலுவலக சாலையில் டூ-வீலரில் செ ன்ற தனியார் மருத்துவக் கல்லூரி முதுகலை பட்டம் பயிலும் நுரையீரல் நிபுண ரிடம் 8பவுன் நகை பறிப்பு, பெரம்பலூர் சங்குப்பகுதி யில் வீட்டுவாசலில் நின்று கொண்டிருந்த பெண்ணி டம் எட்டரைபவுன் நகை பறி ப்பு என 45நாட்களில் 3 பெ ண்களிடம் மொத்தம் 25 பவு ன் நகைகள் முகமூடிக் கொ ள்ளையர்களால் பறித்துச் செல்லப்பட்டுள்ளது குறிப் பிடத்தக்கது.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...