×

வேளாண் கல்லூரி மாணவிகள் சார்பில் துவரம் பருப்பு சேகரிப்பு பயிற்சி

காரியாபட்டி: காரியாபட்டி அருகே துவரம் பருப்பு சேகரிப்பு பற்றி விவசாயிகளுக்கு வேளாண் கல்லூரி மாணவிகள் செயல்விளக்கம் அளித்தனர். காரியாபட்டி பகுதியில் ஊரக பணி  அனுபவ திட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் நவோதயா, திரிஷா விவசாயிகளின் தேவைகளை கண்டறிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பயின்று வருகின்றனர்.  இவ்வகையில் மாணவி நவோதயா, அரசகுளம் விவசாயிகளுக்கு துவரம் பருப்பு சேகரிப்பு உத்திகள் பற்றிய செயல் விளக்கம் அளித்தார்.  இதில் செம்மண், துளசி, மிளகாய் கொண்டு இயற்கை முறையில் துவரம் பருப்பு சேகரிப்பின் போது ஏற்படும் வண்டுகளின் சேதத்தை குறைப்பது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

Tags : Duvaram ,Agriculture College ,
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்