×

போக்சோவில் இளைஞர் கைது

திருப்புத்தூர்: சிகவங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தார். திருப்புத்தூர் அருகே ஏரியூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார்(35). இவர் அப்பகுதியில் கூலித் தொழிலாளி தம்பதியரின் மகளான 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை செல்போனில் படம் பிடித்து சிறுமியைப் பயமுறுத்தி இணையதளத்தில் போட்டு விடுவதாகக் கூறி மீண்டும் மீண்டும் சிறுமியை தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் திருப்புத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எஸ்ஐ சித்திரைச்செல்வி, முத்துக்குமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்து, விசாரித்து வருகிறார்.


Tags : POCSO ,
× RELATED பாலியல் தொல்லை தொழிலாளிக்கு 5 ஆண்டுகள்...