கீழக்கரை: ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான பரதநாட்டியம் போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா தலைமை வகித்தார். கீழக்கரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் நாதியா ஹனிபா, பெண்களின் முன்னேற்றத்திற்காக போராடிய இந்தியாவின் முதல் பெண் பாரிஸ்டர், பெண்களுக்கு வாக்குரிமை பெறுவதற்கு போராடிய மிதன் லாமின் மற்றும் பெண்கள் கல்விச்சாலையை உருவாக்குவதற்கு பாடுபட்ட பாத்திமா ஷேக், டாக்டர் அம்பேத்கர் தந்தை பெரியார் போன்ற பெண்களின் உரிமைக்காக பாடுபட்ட தலைவர்கள் குறித்து பேசினார்.