×

அம்மையநாயக்கனூரில் தெறிக்க விடும் தெரு நாய்கள் பொதுமக்கள் அச்சம்

நிலக்கோட்டை: அம்மையநாயக்கனூர் பகுதியில் கூட்டமாக சுற்றும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அம்மையநாயக்கனூர், கொடைரோடு, மாவுத்தம்பட்டி, பொம்மனம்பட்டி, இடையபட்டி ஆகிய ஊர்களில் பொதுமக்கள் அதிகம் நடமாடும் குடியிருப்பு, கடை வீதி பகுதிகளில் கடந்த சில நாட்களாக தெரு நாய்கள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இவை கூட்டம் கூட்டமாக சுற்றுவதுடன், டூவீலர்களில் செல்வோர் மற்றும் சாலையில் நடந்து செல்வோை பார்த்து குரைப்பது, துரத்துவதுமாக உள்ளது.

சில நேரங்களில் கூட்டமாக சேரும் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு சாலைகளில் செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்கின்றன. இதனால் டூவீலரில் செல்வோர் கீழே விழுந்து காயமுறுகின்றனர். வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. மேலும் தெருநாய்கள் கடித்ததில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். நேற்று முன்தினம் கூட செம்பட்டி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தெருநாய் ஒன்று வெறிபிடித்து 15க்கு மேற்பட்டோைரை கடிக்கு குதறியுள்ளது.  இதனால் இப்பகுதி மக்களும் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிகளில் சுற்றி திரியும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Ammayanayakanur ,
× RELATED அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம்