×

மண்மங்கலம் சாலை பிரிவில் செயல்பாட்டுக்கு வருமா சிக்னல்: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கரூர்: கரூர், சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மண்மங்கலம் பிரிவில் சிக்னலை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். தேசிய நெடுஞ்சாலைகளில் முக்கிய நெடுஞ்சாலையாக சேலம் மதுரை பைபாஸ் உள்ளது. கரூர் மாவட்டம் வழியாக செல்லும் இந்த பைபாஸ் சாலையில் நிமிடத்துக்கு நிமிடம் வாகனங்கள் ஒய்வின்றி சென்று வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியின் வழியாக செல்லும் இந்த பைபாஸ் சாலையில் மண்மங்கலம் பிரிவு அருகே நான்கு வழிப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

வாங்கல், நொய்யல் போன்ற பல்வேறு பகுதிகளூக்கு இந்த பகுதியில் இருந்து சாலைகள் பிரிகிறது. இதன் காரணமாக, விபத்தினை கட்டுப்படுத்தும் வகையில், மண்மங்கலம் பிரிவுச் சாலையில் சிக்னல் அமைக்கப்பட்டது. இந்த பிரிவின் அருகே செம்மடை ரவுண்டானா பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும், அந்த பாலம் பயன்பாட்டுக்கு வரும் வரை சிக்னல் செயல்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Manmangalam ,
× RELATED தேர்தல் அதிகாரியை திட்டிய அதிமுக மாஜி அமைச்சர் மீது வழக்கு