×

ரேஷன் அரிசி பதுக்கிய ஆந்திர வாலிபர் கைது

திருப்பூர்: திருப்பூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை எஸ்.ஐ கார்த்தி மற்றும் போலீசார் பெருமாநல்லூர் அருகே பொங்குபாளையம் பரமசிவம்பாளையம் கருக்கங்காடு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கல் தொடர்பாக  சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு அறையில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்த ஆசம்கதரி (37) என்பவர், பரமசிவம்பாளையம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள மக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, மாட்டுத்தீவனத்துக்கு பயன்படுத்த பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆசம்கதரியை போலீசார் கைது செய்து  350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.


Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா