உடுமலை: ஒன்றிய அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு நேற்று முன்தினம் மாலை ஏஐடியுசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர் சங்க தலைவர் ஈஸ்வரன், பொதுச்செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். சமையல் காஸ் விலையை குறைக்க வேண்டும், காரல்மார்க்சை அவதூறாக பேசிய கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும். பள்ளபாளையம் தொகுப்பு வீடுகளை பராமரிக்க வேண்டும். அமைப்பு சாரா கட்டுமான தொழிலாளர்களுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.