×

நூலகத்தில் மகளிர் தின விழா

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட மைய நூலகத்தில் மகளிர் தின விழா நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் ஜான்சாமுவேல் தலைமை வகித்தார். வாசகர் வட்டத்தலைவர் அன்புத்துரை வரவேற்றார். மகளிர் நூலகர்களுக்கு விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ்செம்மல் பகீரத நாச்சியப்பன், நூலக ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் மகளிர் தின சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் நூல் சரிபார்ப்பு அலுவலர்கள் வெள்ளைச்சாமி, கண்ணன் மாவட்ட மைய நூலகர் தவமணி, எழுத்தாளர் ஈஸ்வரன், கண்காணிப்பாளர் சாமிநாதன், நூலகர்கள் முத்துக்குமார், கனகராஜ், சாந்தி மற்றும் 50க்கும் மேற்பட்ட நூலகர்கள், வாசகர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Women's Day ,
× RELATED ரோகிணி கல்லூரியில் மகளிர் தின கொண்டாட்டம்