×

விவசாயிகள் மகிழ்ச்சி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி: கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேற்று, ஒன்றிய அரசை கண்டித்து ஆனைமலை எல்ஐசி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு, வட்டார தலைவர் பூபதி தலைமை தாங்கினார். நகர தலைவர் ஆதாம், மாவட்ட செயலாளர் சுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பகவதி கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 5ஜி அலைகற்றை குறைவான ஏலத்துக்கு அதானிக்கு கொடுத்த விவகாரத்தில், பாராளுமன்றத்தை உடனே கூட்டி வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். அதானி குழுமத்தின் மோசடி குறித்து வெளியிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு துணை போகும் ஒன்றிய அரசை கண்டிக்கிறோம்’ உள்ளிட்ட பல்வேறு கோஷம் எழுப்பினர்.




Tags : Farmers Joy Union Government ,
× RELATED விவசாயிகள் மகிழ்ச்சி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்