பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கோவை, பாலக்காடு, மதுரை, சென்னை, பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ரயில் சேவை உள்ளது. இந்த ரயில்கள் செல்லும் வழித்தடத்தில் உள்ள ரயில்வே கேட் பகுதி அவ்வப்போது பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதில் நேற்று, பொள்ளாச்சி நகரில் உள்ள குமரன்நகர் ரயில்வே கேட் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, குமரன்நகர் ரயில்வே கேட் பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று (9ம் தேதி) காலை 6 மணிவரை தொடர்ந்து 12 மணிநேரம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் குமரன்நகர் ரயில்வே கேட் மூடப்பட்டது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள், பாலக்காடு ரோடு, சிடிசி மேடு வழியாக மாற்றுப்பதையில் சென்றது. இருப்பினும், மக்கள் தொகை அதிகமுள்ள குமரன்நகர் பகுதி ரயில்வே கேட் தொடர்ந்து 12மணி நேரம் அடைக்கப்பட்டு பணிகள் மேற்கொண்டாலும், இரவில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பலரும் அவதிப்பட்டனர்.