×

எ.புதூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்கம் மனு

திருச்சி: திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கிராம நிர்வாக அலுவலகத்தில், ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் மனு அளித்தனர். அந்த மனுவில், கட்டுமான தொழிலாளர்களுக்கு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ திட்டம் அமல்படுத்தும் வரை இஎஸ்ஐ திட்டத்தில் வழங்கப்படும் தொழிலாளிக்கான மருத்துவ உதவி, குடும்ப மருத்துவம், விபத்து சிகிச்சை, சிகிச்சைகான கால நிவாரணம் உள்ளிட்ட பலன்களை வாரியம் மூலமாக வழங்கி கட்டுமான தொழிலாளர்கள் வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும். பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். ஓய்வூதியம் பெற்றுவரும் மூத்த தொழிலாளர்கள் மரணமடைந்தால் ஈமச்சடங்கு உதவித்தொகை, இயற்கை மரண உதவித்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முதல்வருக்கு தெரிவிக்கும் வகையில் மனு அளித்தனர்.

Tags : AITUC Building Workers Union ,A. Putur Village Administration Office ,
× RELATED ஓசூரில் ஏஐடியூசி கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்