×

உலக மகளிர் தினம் திருவாரூரில் சைக்கிள் பேரணி கலெக்டர் சாரு பங்கேற்பு எம்எல்ஏ பூண்டிகலைவாணன் துவக்கி வைத்தார்

திருவாரூர்: உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு திருவாரூர் புதிய ரயில் நிலையத்திலிருந்து நடைபெற்ற மகளிர் தின சைக்கிள் பேரணியில் மாவட்ட கலெக் டர் சாரு கலந்து கொண்டு மகளிருடன் சைக்கிள் ஓட்டினார்.  இப்பேரணியை பூண்டி கலைவாணன் எம்எல்ஏ கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணி பழைய பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. இப்பேரணியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், நகர்மன்ற தலைவர் புவனப்பரியா செந்தில், நகர்மன்ற துணைத் தலைவர் அகிலா சந்திரசேகர், நக ராட்சி ஆணையர் பிரபாகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் . பிரகாஷ், செந்தில், சங்கர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.




Tags : International Women's Day Cycle Rally ,Tiruvarur ,Charu ,MLA ,Poondikalaivanan ,
× RELATED பள்ளி மாணவ, மாணவிகள் போலீசாருக்கு எஸ்.பி பாராட்டு