×

தஞ்சாவூரில் பைக் மோதி தொழிலாளி பலி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் விளார் ரோடு பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் செந்தில்குமார் (40) தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது நண்பர் பாண்டியன் என்பவருடன் பைக்கில் தஞ்சாவூரில் இருந்து அம்மன்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார் திட்டை மாரியம்மன் கோவில் குளம் அருகே சென்ற போது பின்னால் வந்த மற்றொரு பைக் மோதியது. இதில் செந்தில்குமார், பாண்டியன் ஆகிய இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அவர்களை தஞ்சாவூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் இறந்தார். பாண்டியன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தஞ்சாவூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Laborer ,Thanjavur ,
× RELATED கிராம கூட்டத்தில் தொழிலாளி கொலை: முன்னாள் நாட்டாமை கைது