×

அதிமுக தொண்டர்களின் எண்ணம் விரைவில் நிறைவேறும் மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி பேட்டி

குடியாத்தம், மார்ச் 8: அதிமுக தொண்டர்களின் எண்ணம் விரைவில் நிறைவேறும் என்று மாஜி அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் அதிமுக முன்னாள் வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக தொண்டர்களின் பல நாள் விருப்பம் இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவேற போகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா பிறகு தொண்டர்கள் ஏற்றுக் கொண்ட
ஒரே தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தான். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்பது தான் தொண்டர்களின் நிலையாக உள்ளது. இதுவே அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். அப்போது மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு, மாவட்ட ஆதிதிராவிடர் குழு உறுப்பினர் ரமேஷ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags : Former minister ,K.C. Veeramani ,AIADMK ,
× RELATED ராயபுரத்தில் 25 ஆண்டு முடிசூடா மன்னனாக...