தேனி: தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை நாடார் சரசுவதி கலை, அறிவியல் கல்லூரியில் 22ம் ஆண்டு அமுதசுரபி தமிழ் இலக்கிய மன்ற விழா நடத்தப்பட்டது. விழாவிற்கு உறவின்முறைத் தலைவர் டாக்டர். ராஜமோகன் தலைமை வகித்தார். உபதலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் காசிபிரபு வரவேற்று பேசினார். விழாவில் இலங்கை வானொளி தமிழ் அறிவிப்பாளர் பிஎச் அப்துல்ஹமீத் எழுதிய வானலைகளில் ஒரு வழிபோக்கன் எனும் நூல் அறிமுகப்படுத்தப்பட்டது.