×

குஜிலியம்பாறை அருகே பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெயிண்டர் சிகிச்சை பலனின்றி பலி

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே பெயிண்டரை பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்து கொலை செய்ய பெண் முயன்ற சம்பவத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குஜிலியம்பாறை அருகே கரிக்காலி கண்ணுமேய்க்கிபட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (38). பெயிண்டர். அதே ஊரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (36). கணவர் இறந்த விட்ட நிலையில், கூலி வேலை செய்து வருகிறார். முத்துக்குமார், மகேஸ்வரி இடையே கடந்த சில வருடங்களாக நெருங்கிய பழக்கம் இருந்து வந்துள்ளது.  இதை பயன்படுத்தி மகேஸ்வரியிடம் இருந்து 3 பவுன் தங்க நகைகள் முத்துக்குமார் வாங்கியுள்ளார். மகேஸ்வரி திரும்ப கேட்ட போது நகைகளை தர மறுத்துள்ளார். மேலும் மகேஸ்வரியிடம் அடிக்கடி பணம் கேட்டும், தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளதாகவும் தெரிகிறது. கடந்த பிப்.28ம் தேதி இரவு சி.அம்மாபட்டி இருந்து தவசிபட்டி செல்லும் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு முத்துக்குமார், மகேஸ்வரி டூவீலரில் சென்றனர்.

அங்கு இருவர் மட்டும் தனியே இருந்துள்ளனர். அப்போது, மகேஸ்வரி தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து முத்துக்குமார் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் முத்துக்குமாருக்கு இடுப்புக்கு கீழ் பகுதியில் தீப்பற்றி பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து டூவீலரை சம்பவ இடத்திலேயே போட்டுவிட்டு, அங்கிருந்து தப்பி முத்துக்குமார் வீடு வந்து சேர்ந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுகுறித்து முத்துக்குமார் அளித்த புகாரில் கொலை முயற்சி வழக்குப்பதிந்த குஜிலியம்பாறை போலீசார் மகேஸ்வரியை கைது செய்தனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு பின், முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதையடுத்து ேபாலீசார் கொலை வழக்கமாக மாற்றி விசாரித்து வருகின்றனர்.

Tags : Kujiliamparai ,
× RELATED குஜிலியம்பாறை அருகே 5,000 ஆண்டு பழமையான கல் பதுகை கண்டுபிடிப்பு