×

ஆதார் எண் இணைக்க முகவரி இல்லாமல் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கிய மின்வாரிய அதிகாரி சஸ்பெண்டு

திருவெறும்பூர் மார்ச் 8: ஆதார் எண் இணைக்க வீடுகளுக்கு முகவரி இல்லாமல் நோட்டீஸ் வழங்கிய மின்வாரிய அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டார். திருவெறும்பூர் பகுதியில் ஒரே வளாகத்திற்குள் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் உள்ள மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்க வலியுறுத்தி முகவரி இல்லாமல் நோட்டீஸ் கொடுத்ததற்காக திருவெறும்பூர் மின்சார வாரிய கூடுதல் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தியை மின்சார வாரியம் தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது. தமிழக அரசு வீடுகளுக்கு வழங்கும் மின்சார மானியத்தை ஒழுங்கு படுத்துவதற்காக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தி உள்ளது.

அதன் அடிப்படையில் ஆதார் எண் இணைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரே வளாகத்திற்குள் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. வளாகத்திற்கு ஒரு மின் இணைப்பு என்ற அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்க உத்தரவிடப்பட்டுள்ளது ஆகவே தங்களது மின் இணைப்புகளை ஒரே இணைப்பாக இக்கடிதம் கிடைத்த 15 நாட்களுக்கும் இணைத்துக் கொள்ளுமாறு திருவெறும்பூர் இயக்கலும் காத்தலும் உதவி பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு நோட்டீஸ்களை முகவரி இல்லாமல் வழங்கி உள்ளார். இது சமூக வலைதளங்களில் பரவி உள்ளது. இதனைத் தொடர்ந்து மின்சார வாரியம் கிருஷ்ணமூர்த்தியை தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Tags : Electricity Board ,
× RELATED பெரம்பலூரில் மின்கம்பிகளை உரசிய மரக்கிளைகளை அகற்றும் பணி