×

மூதாட்டியிடம் ரூ.4 லட்சம் மோசடி இந்து அமைப்பு நிர்வாகி கைது

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தன்னிடம் இருந்து ரூ.4 லட்சம் பணத்தை வாங்கி மோசடி செய்ததாக மூதாட்டி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் இந்து அமைப்பு நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் கீழவாசல் பாலோபநந்தவனம் பொன்னி நகரைச் சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி ரஞ்சிதம் (60). இவரது வீட்டில் இந்து இளைஞர் எழுச்சி பேரவை நிறுவனர் பழ.சந்தோஷ்குமார் (28) என்பவர் வாடகைக்கு குடியிருந்து வந்தார். இந்நிலையில் ரஞ்சிதத்தின் கணவர் நடராஜன் இறந்துவிட்டார். இதனால் ஏற்பட்ட சொத்து பிரச்னை தீர்த்து வைப்பதாகக் கூறி ரஞ்சிதத்திடம், சந்தோஷ்குமார் ரூ.4 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது. நீண்ட காலமாகியும் இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காததால், சந்தோஷ்குமாரிடம் தான் கொடுத்த ரூ.4 லட்சத்தை திருப்பி கொடுக்குமாறு ரஞ்சிதம் கேட்டார். ஆனால் பணத்தை கொடுக்காமல் சந்தோஷ்குமார் இழுத்தடித்து வந்தாராம். இதுகுறித்து தஞ்சாவூர் கிழக்கு போலீசில் ரஞ்சிதம் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...