×

பெரம்பலூரில் 11ம் தேதி ரேஷன் குறைதீர் முகாம்

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் சம்பந் தமான பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் வரும் 11ம் தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளை களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம், பெரம்பலூர் தாலுகா, சத்திரமனை கிராமத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர் தலைமையிலும், வேப்பந்தட்டை தாலுகா, அரும்பாவூர் கிராம த்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், குன்னம் தாலுக்கா, காடூர் (வ) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகா ப்பு அலுவலர் தலைமையி லும், ஆலத்தூர் தாலுகா, கூடலூர் கிராமத்தில், கலால் உதவி ஆணையர் தலைமையிலும் 11ம்தேதி சனிக் கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான, குறைகளைத் தெரிவித்துப் பயனடையலாம் என மாவட்டக் கலெக் டர் கற்பகம் தெரிவித்து ள்ளார்.

Tags : Ration Shortage Camp ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...