×

வேதாரண்யத்தில் மாநில சதுரங்க போட்டி வென்றவர்களுக்கு பரிசு வழங்கல்

வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி நடைபெற்றது. சதுரங்கப் போட்டியை வேதாரண்யம் நகர மன்ற தலைவர் புகழேந்தி தொடக்கி வைத்தார். இந்த சதுரங்க போட்டியில் 510 பேர் கலந்து கொண்டனர். சதுரங்க போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

விழாவிற்கு தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினார். திமுக ஒன்றிய செயலாளர்கள் சதாசிவம், உதயம் முருகையன், வேதாரண்யம் வர்த்தக சங்கத் தலைவர் தென்னரசு, வழக்கறிஞர் அன்பரசு, ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, வேதாரண்யம் நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Vedaranyam ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்